TNPSC Group 4 Cut Off Marks: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் நேற்று வெளியானது. இதனை தேர்வர்கள் பார்த்து தெரிந்து கொண்டனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை எதிர்பார்த்து கொண்டு உள்ளனர். அதனை இப்போது இந்த பதிவில் பார்ப்போம்.

குரூப் 4 தேர்வு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 6 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6244 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர். இதனிடையே குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் தற்போது 9491 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
முதலில் குரூப் 4 தேர்வு மூலம் 6,244 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தேர்வர்களின் கோரிக்கைக்கு ஏற்று முதலில் 480 காலிப்பணியிடங்களும், இரண்டாம் முறை 2,208 காலிப்பணியிடங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டது. மேலும் மூன்றாம் முறையாக 559 காலிப்பணியிடங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, இதனால் இந்த முறை குரூப் 4 தேர்வின் மூல மொத்தம் 9,491 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
குரூப் 4 தேர்வு கட் ஆஃப் மதிப்பெண்கள்:
நேற்று குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். இங்கு கட் ஆஃப் எனக் குறிப்பிடப்படுவது 300 மதிப்பெண்களுக்கு அல்லாமல், 200 கேள்விகளுக்கு எத்தனை சரியான கேள்விகள் என்பதே ஆகும்.
அந்தவகையில், பொதுப் பிரிவினருக்கு 164 – 167, பி.சி பிரிவினருக்கு 163 – 166, எம்.பி.சி பிரிவினருக்கு 163 – 166 ஆக இருக்க வாய்ப்புள்ளது. பி.சி முஸ்லீம் பிரிவினருக்கு 156 – 159, எஸ்.சி பிரிவினருக்கு 160 – 163, எஸ்.சி.ஏ பிரிவினருக்கு 158 – 163, எஸ்.டி பிரிவினருக்கு 155 – 159 என்ற அளவில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு இதிலிருந்து ஒரு மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து , இணையவழி மூலம் சான்றிதழ்பதிவேற்றம் செய்யப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.